;
Athirady Tamil News

அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்!!

0

பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லி துவார்கா பகுதியில் வசித்து வரும் சுமார் 40 வயது பெண்மணி ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக நிர்வாகி, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், உங்களுடைய முகவரியை கூறுங்கள் என கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்மணி, டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கியுள்ளார்.

மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை சமாதானப்படுத்த, டெலிவரி நிர்வாகி ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்க, அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் அந்த பெண் தனியாக வசித்து வருவதும், மனஅழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

\

You might also like

Leave A Reply

Your email address will not be published.