;
Athirady Tamil News

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

0

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதாவது 18-08-2023 முதல் 27-08-2023 வரை நடைபெறவுள்ள பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இரண்டு நாட்கள் கடமை விடுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 28-08-2023 மற்றும் 29-08-2023 ஆகிய திகதிகளில் விடுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த விடுப்புக்கு ஒப்புதல் பெற, மேற்கூறிய அதிகாரிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளில் தாங்கள் பங்கேற்றதற்கான வருகை சான்றிதழை சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.