;
Athirady Tamil News

கிரீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

0

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்கில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து கிரீஸ் சென்றடைந்தார். தலைநகர் ஏதென்சில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, கிரீஸ் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோவை பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது, கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார். அதன்பி்ன் கிரீஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். பல்வேறு வி.ஐ.பி.,க்களையும் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், கிரீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவருக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் கிரீஸ் உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.