;
Athirady Tamil News

இத்தாலியில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

0

இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வெயிலால் அதிக வெப்பம் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் அவசிய தேவை தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தாலியில் கொளுத்தும் வெயில் காரணமாக அல்பாயின் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

எனவேவெப்பத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்வதற்காக பல்வேறு வழிகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டில் உள்ளே இருக்குமாறும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இத்தாலிய அதிகாரிகள் இந்த வார இறுதியில் ரோம் மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு “தீவிர” சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நீராகாரத்துடன் இருக்குமாறும், இலேசான உணவை உண்ணுமாறும் மற்றும் நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்குமாறும் நாட்டின் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.