;
Athirady Tamil News

யாழ்.மாவட்ட செயலகம் முன் போராட்டம்!!

0

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF & ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் 01 மணி வரையில் ஒருமணி நேர அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் , அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் , பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம் , வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம் , வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம் , ஶ்ரீ லங்கா தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம் , வடமாகாண அரச சாரதிகள் சங்கம் மற்றும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் ஆகிய 09 சங்கங்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.