;
Athirady Tamil News

உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம் !!

0

இந்த உலகில் எமது உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை அதில் அனுபவ ரீதியாக பட்டுணர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த ஷிவ் கிரேவால் என்பவர் சுமார் 7 நிமிட மரணத்திற்கு பின்னர் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி முக்கியத்துவம் மிக்கதாக மாறியுள்ளது.அவர் தெரிவித்தமை வருமாறு,

2013 ஆம் ஆண்டு லண்டனில் உணவு சாப்பிட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 7 நிமிடங்களுக்கு பின்னர் அவர் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார்.

மரணத்திற்கு பின்னர் எனது உடலில் இருந்து உயிர் முற்றிலும் பிரிக்கப்பட்டதை போன்று உணர்ந்தேன். ஏதோ வெற்றிடத்தில் இருப்பதாக எனக்கு தெரிந்தது. அதேநேரம் உணர்ச்சிகள் இருந்தன. விண்வெளியில் இருப்பதை போன்று நினைவுகள் இருந்தன. மறு பிறவி அல்லது இன்னொரு வாழ்க்கை நமக்கு இருக்கலாம். என் இதயம் நின்ற பின்னர் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்.

ஆனால் கடவுள் எனக்கு மீண்டும் உயிரைக் கொடுத்துள்ளார். இதற்கு நன்றியுடையவனாக நான் இருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.