;
Athirady Tamil News

மட்டக்குளிய படுகொலை: ஐவர் கைது !!

0

மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நபர் ஒருவரை ஆயுதத்தால் குத்திக் கொன்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், பாடசாலை மாணவர் மற்றும் வர்த்தகர் உட்பட ஐவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்குளியைச் சேர்ந்த ஆர். ஆர். எம் பீரிஸ் என்ற 36 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த 25 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் குத்திக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவரின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.