;
Athirady Tamil News

அங்கீகாரம் கோரி சபாநாயகருக்குக் கடிதம்!!

0

பொருளாதார நீதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவை உத்தியோகபூர்வ குழுவாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிற்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருக்கும் இலங்கை மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். எனவே எங்கள் கட்சிப்பிரிவுகளைக் கடந்து ஒரு குழுவை அமைக்க நாம் முடிவு செய்தோம். எனவே இக்குழுவை உத்தியோகபூர்வ குழுவாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்துக்கட்சிகளிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைஉள்ளடக்கிய குறித்த குழுவானது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் இயங்குகிறது.

இந்தக்குழுவை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் கொழும்பில் ஒரு ஹோட்டலில் இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் 45 உறுப்பினர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.