;
Athirady Tamil News

காவிரி நதிநீர் விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தமிழக அரசு முடிவு!!

0

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இந்த முடிவை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் செப்டம்பர் 1-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுவது தமிழகத்திற்கு போதாது. இன்றைய கூட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கையை கர்நாடகா ஏற்கவில்லை. அவர்களது நீர் தேவையை அவர்கள் கேட்கிறார்கள், எங்களது நீர் தேவையை நாங்கள் கேட்கிறோம். தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு தரவேண்டும்; இல்லாவிடில் சட்டப்படி சந்திப்போம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.