;
Athirady Tamil News

கட்சி மாற பேச்சுவார்த்தை நடத்துவதாக பொய் பிரசாரம்-ஒம்சக்தி சேகர் பேட்டி!!

0

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:- உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி உள்ள கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எப்போதும் எந்த பிரச்சினை யிலும் மாட்டி விட மாட்டேன். நானே எதுவாக இருந்தாலும் எதிர்கொள் வேன்.

நான் எப்போதும் யாரையும் அரசியல்ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்வேன், தொழில் ரீதியாக விமர்சனம் செய்வது நல்லதல்ல. நான் ஏதோ ஒரு கட்சியில் பேசி வருவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் எந்தக் கட்சிக்கு சென்றாலும் என்னை வரவேற்க அந்த கட்சியினர் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.