;
Athirady Tamil News

புதிய அங்கத்தவர்களை இணைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி !!

0

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் திர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை கட்டியெழுப்புவதே ஐக்கிய மக்கள் சக்தியின் குறிக்கோள். அந்த இலக்கை வெல்வதற்கான பிரச்சாரம் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்கக் கூடிய எந்தவொரு தரப்பும் ஆளும் தரப்பில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.