;
Athirady Tamil News

ஆந்திராவில் மனைவி, மகள், மகனை கிணற்றில் தள்ளிவிட்டு குதித்த தொழிலாளி- 3 பேர் பலியான பரிதாபம்!!

0

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், மர்ரி பாலத்தை சேர்ந்தவர் முகைதீன் (வயது 46). கூலி தொழிலாளி.இவரது மனைவி சம்சினிதா (39). மகள் பாத்திமா, ஜாஹிதா (17), மகன் அலி. நேற்று முன்தினம் மாலை தனது மனைவி குழந்தைகளுடன் சிந்தப்பாலம் சென்ற முகைதீன் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவரது மனைவி, மகள், மகன் ஆகியோரை அங்குள்ள கிணற்றின் அருகே அழைத்து சென்றார். திடீரென மனைவி, மகள், மகனை கிணற்றில் தள்ளினார். அவரும் கிணற்றில் குதித்தார். கிணற்றில் அவர்கள் உயிருக்கு போராடியபடி அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முகைதீன் அவரது மனைவி மகள் தண்ணீரில் மூழ்கினர்.

அங்கிருந்தவர்கள் அலியை மட்டும் உயிருடன் காப்பாற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகைதீன், அவரது மனைவி, மகளை கிணற்றிலிருந்து பிணமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகைதீன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.