;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரம்பா! (Photos)

0

தென்னிந்திய பிரபல நடிகையும் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரை திருமணம் செய்தவருமான நடிகை ரம்பா இந்திரகுமார் தம்பதியினர் தமது மகனின் 05 ஆவது பிறந்ததினத்தினத்தை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டமானது நேற்றையதினம் யாழ் மானிப்பாய் சுதுமலையில் அமைந்துள்ள இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி
யாழ்ப்பாண முற்றவெளியில் இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகை ரம்பா கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை ரம்பாவின் மகனின் பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.