;
Athirady Tamil News

சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு சபதம்

0

காசா மீண்டும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த முழு சக்தியையும் பயன்படுத்துவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த முயற்சி
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்ந்து வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சண்டையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற 4வது நாளாக முயற்சித்து வருகிறது.

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடி போர்நிறுத்த வாய்ப்பை நிராகரிக்கிறார். தற்போது இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ளார் வீடியோவில் ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெதன்யாகு சூளுரை
குறித்த வீடியோவில் அவர், ‘நாங்கள் வெற்றி பெறும் வரை போராடுவோம். ஹமாஸ் ஒழிப்பு மற்றும் எங்களின் பணயக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது ஆகிய அனைத்து அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போரை நிறுத்த மாட்டோம்.

ஹமாஸிடம் நான் முன் வைக்கும் தேர்வு (Choice) மிகவும் எளிமையானது: சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை.

நாங்கள் ஹமாஸை ஒழித்த பிறகு, காசா மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த எனது முழு சக்தியையும் பயன்படுத்துவேன்’ என சபதமிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.