;
Athirady Tamil News

கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்கணும்.. மனைவியிடம் பேசிவிட்டு உயிரை மாய்த்த கணவர்

0

கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்று மனைவியிடம் பேசிய கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் – மனைவி சண்டை
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்ட டோம்பிவலியைச் சேர்ந்த தம்பதியினர் சுதாகர் யாதவ் (41 வயது), சஞ்சனா யாதவ் (31 வயது). இவர்கள் இருவருக்கும் கடந்த 19 -ம் திகதி பிரச்சனை வந்து சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், மனைவி சஞ்சனா யாதவ் அங்கிருந்து கிளம்பி தனது சகோதரி வீட்டிற்கு சென்று அங்கு தங்கியுள்ளார்.

உன் குரலை கேட்கணும்
இந்நிலையில், சண்டை போட்ட மறுநாள் சஞ்சனா காலையில் 10 மணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது சுதாகர் யாதவ் போன் செய்துள்ளார். அப்போது பேசிய சுதாகர், கடைசியாக உன் குரலை 2 நிமிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தூக்கு போடும் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த சஞ்சனா, பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து அங்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்த போது கதவை சுதாகர் திறக்கவில்லை.

பின்பு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுதாகர் தூக்கிட்டு நிலையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.