;
Athirady Tamil News

யாழில் 10 கிலோ இறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வீடொன்றில் இருந்து 10 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல் என்பவற்றை மீட்ட பொலிஸார் வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது , மாடொன்று இறைச்சியாக்கப்பட்டதற்கான அடையாளங்களை கண்ணுற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அருகில் உள்ள வீட்டின் மீது சந்தேகம் கொண்டு , வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது வீட்டினுள் இருந்து 20 மதுபான போத்தல்களை, குளிர்சாதன பெட்டியில் இருந்து 10 கிலோ இறைச்சியையும் மீட்டதுடன் , வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.

தமது வீட்டில் கொண்டாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் , அதற்காகவே மதுபான போத்தல்களும் ,, இறைச்சியும் இருந்தது என வீட்டார் கூறிய போதிலும் , பொலிஸார் அதனை ஏற்காது குடும்பஸ்தரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.