;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1684363.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு

0

கனடாவில் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகிறது; இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளாா்.

கனடா பாதுகாப்பு ஆலோசகா் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற ஜோடி தோமஸ், நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியா ஒத்துழைத்து வருவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

நிஜ்ஜாா் கொலை விசாரணையில்
இது குறித்து கூறிய தோமஸ், ‘நிஜ்ஜாா் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்கவில்லை எனக் கூறவில்லை. இரு நாட்டு உறவு ஏற்றம் கண்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்திய பேச்சுவாா்தையும் சுமுகமாக இருந்தது’ என்றாா்.

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய திட்டமிட்ட நிகில் குப்தா கைதுசெய்யப்பட்டது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த தோமஸ், ‘

கனடாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு
இரு சம்பவங்களுக்கும் தொடா்பு இருக்கலாம். அமெரிக்கா அளித்த தகவல் இந்தியா குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகா் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறாா். இந்தப் பிரச்னையை தீா்க்கும் தறுவாயில் உள்ளோம்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.