;
Athirady Tamil News

இளவரசர் ஹரிக்கு கடும் பின்னடைவு… விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

0

அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் பழக்கம்
விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் பிரித்தானிய இளவரசர் ஹரி போராடி வருகிறார்.

தனது Spare நினைவுக் குறிப்பில், magic mushrooms உட்பட போதைப் பொருட்களை தாம் பயன்படுத்தியுள்ளதாக ஹரி பதிவு செய்திருந்தார். இந்த நிலையிலேயே அமெரிக்க சமூக ஆர்வலர் ஒருவர் இளவரசர் ஹரிக்கு விசா அனுமதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அத்துடன், ஹரி தமது விசா விண்ணப்பத்தில், போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரா என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

ஹரி தமது போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் பொய் கூறியிருந்தால் அது அமெரிக்க பெடரல் சட்டத்தை மீறுவதாகும். இதனால் அவர் தமது குடிபெயர்தல் அந்தஸ்தை இழக்க நேரிடும்.

தனியுரிமைக்கு எதிரான அத்துமீறல்
இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் அரசு தரப்பு சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தாங்கள் தயாரென்று உறுதி அளித்துள்ளனர். மேலும், ஹரியின் நினைவுக் குறிப்பு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஆவணமாக கருத முடியாது என்றே அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, ஹரியின் தனிப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடுவது என்பது ஹரியின் தனியுரிமைக்கு எதிரான அத்துமீறல் என்றே அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஹரியின் விசா ஆவணங்களை ஒப்படைக்க நீதிபதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.