எல்லையைக் கடந்துவந்து வாக்களித்துச் சென்ற 2500 இந்தியர்கள்., எந்த மாநிலத்தில் தெரியுமா?
வங்கதேச பகுதியில் வசிக்கும் 2500 இந்தியர்கள் எல்லை தாண்டி வாக்களித்தனர். இந்த சம்பவம் திரிபுராவில் நடந்துள்ளது.
வரலாற்றுக் காரணங்களால், திரிபுரா மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லைக் கிராமங்களில் வசிக்கின்றனர்.
மேற்கு திரிபுரா நாடாளுமன்றத் தொகுதிக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
திரிபுராவில் உள்ள ராம்நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பல கிராமங்கள் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன.
ஒரு கிராமத்தில் 19 இந்தியக் குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 50 வாக்காளர்கள் எல்லை தாண்டி வந்து தங்களது வாக்குரிமையை பயன்படுத்தினர்.
அதேபோல், இந்தியா-வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள ஜெயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,500 இந்தியர்கள் எல்லையைத் தாண்டி வந்து வாக்களித்தனர்.
திரிபுராவுக்குள் நுழைந்த கிராமவாசிகளை புகைப்பட அடையாள அட்டை மூலம் BSF வீரர்கள் சரிபார்த்தனர்.
அகர்தலா நகருக்கு மிக அருகில் உள்ள ஜெயநகர் பகுதியில் பெண் BSF வீரர்கள் இப்பணியைச் செய்தனர்.