;
Athirady Tamil News

பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து: வெளியான அதிர்ச்சி தகவல்

0

இந்தியாவின் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில்(Everest Fish Curry Masala) அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் ஒன்றாக காணப்படுகின்றது.

இந்த நிறுவனமானது தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்துவருகின்ற நிலையில் இந்த மசாலாவை சந்தையிலிருந்து திரும்பப்பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

நுண்ணுயிர் மாசு
இது தொடர்பாக சிங்கப்பூர் உணவு முகமை(Singapore Food Agency) அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் “எத்திலீன் ஆக்சைடு(Ethylene oxide) உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நுண்ணுயிர் மாசுபாட்டைத் தடுக்க விவசாயப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உணவு விதிமுறை
சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின் கீழ் மசாலாப் பொருட்களில் கிருமி நீக்கம் செய்ய எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள பொருட்களை உட்கொள்வதால் உடனடி ஆபத்துகள் எதுவும் இல்லை.

ஆனால் இது நீண்டகாலத்திற்கு உடல் நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அத்தோடு இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உடல்நலம்
சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

மேலும் தகவலுக்கு நுகர்வோர் தங்கள் கொள்முதல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எவரெஸ் மீன் மசாலா தயாரிப்புகளையும் உடனே திரும்பப் பெறுமாறு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ள நிலையில் சிங்கப்பூரின் உணவு முகமையின் இந்த அறிவிப்புக்கு எவரெஸ்ட் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.