;
Athirady Tamil News

வீட்டிற்குள் புகுந்த கங்கை வெள்ளம்.., பால் ஊற்றி புனித நீராடிய பொலிஸ் அதிகாரி

0

வீட்டிற்குள் புகுந்த கங்கை நீரில் பால் ஊற்றி புனித நீராடிய பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொலிஸின் செயல்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கங்கை, யமுனை நதி​களில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டு பிர​யாக்​ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 1,400 பேர் அங்​கிருந்து நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்நிலையில், மாநில காவல் துறை​யில் உதவி ஆய்​வாள​ராக பணி​யாற்​றும் சந்​திரதீப் நிஷாத் என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “நேற்று நான் பணிக்கு புறப்​பட்​ட​போது என்னுடைய தாய் கங்கா என் வீட்​டுக்கு வந்​திருந்​தார். அவருடன் ஆசி பெற்று சென்றேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், சீருடையில் இருந்த அவர் தன் வீட்டு வாசலில் சூழ்ந்​துள்ள கங்கை வெள்​ளத்​தில் ரோஜா இதழ்​களை தூவு​கிறார். பின்னர் அதன் மீது பாலை ஊற்றுகிறார்.

இதையடுத்து, மேலாடை இல்​லாமல் இடுப்​பளவு தண்​ணீர் இறங்கி கங்கை தாயை வணங்​கியபடி புனித நீராடுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.