;
Athirady Tamil News

யாழில். 10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை , பொலிஸ் அதிரடி படையினர் வழிமறித்து சோதனை செய்த போது, அவர்களின் உடைமையில் இருந்து 09 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து அவர்களை கைது செய்த பொலிஸ் அதிரடி படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவர்களை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.