;
Athirady Tamil News

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீ பிடித்த பேருந்து

0

தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று தீப்பற்றுதலுக்கு உள்ளாகியுள்ளது.

காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.