கொடூரத்தின் உச்சத்தை காட்டிய இளைஞன் ; கால்வாய்க்குள் கிடைத்த சடலம்
அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து ஆணின் சடலம் நேற்று (17.09.2025) மீட்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனிப்பட்ட தகராறு காரணமாக போத்தலினால் தாக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.