;
Athirady Tamil News

யாழ். விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்

0

யாழ். மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில், விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த விடயத்தை வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது மழை பெய்த பின் காற்றோடு சேர்ந்து குளிருடனான காலநிலை அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சிப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்களில் குறித்த நோய் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளிலும் நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் நிலவுகிறது.

ஆகவே, விவசாயிகள் குறித்த நோய்த் தாக்கத்தை ஆரம்பத்தில் கட்டுப்படுத்துவதற்கு அருகில் உள்ள விவசாய போதனாசிரியர்களை அணுகி அவர்களின் ஆலோசனையை பெற்று கிருமிநாசினிகளை விசுறுமாறு அறிவுறுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.