;
Athirady Tamil News

தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

0

மாவீரர் வாரம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நினைவாலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேச விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மண்ணுக்காக உயிர்நீத்த வீரமறவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் 27 ம் திகதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதுடன் 26 ம் திகதி மாலை 6.00 மணிக்கு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.