;
Athirady Tamil News

இறுதிச் சடங்கிற்கு சென்ற வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

0

இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

குறித்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இந்த விபத்து நிகழ்ந்தது, இவ் விபத்து இடம்பெற்றதற்கான காரணம் கன மழை மற்றும் அடர்ந்த மூடு பனியினால் வீதி தெளிவில்லாததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக என்று ஓட்டுநர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.