;
Athirady Tamil News

இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

0

கொட்டுகொட பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபை(CEB) அதன் கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையத்தை தற்காலிகமாக மூடிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுற்றியுள்ள ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, துணை மின் நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம்
நேற்று (29) கட்டுப்பாட்டுப் தளத்தை தண்ணீர் அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது

இதனால் அதிகாரிகள் துணை மின்நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.