;
Athirady Tamil News

அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; மக்களே அவதானம்

0

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.