;
Athirady Tamil News
Daily Archives

1 March 2023

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 180 பவுன் நகையை பாதுகாப்பு அறைக்கு தாமதமாக கொண்டு சென்ற…

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் அளித்த காணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு…

ஹாங்காங்கில் கொலையுண்ட மாடல் அழகியின் தலை பானையில் மீட்பு!!

ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபிசோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தவர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரை சுமார் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அபிசோய்க்கு…

எர்ணாகுளம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- தொழிலாளி பலி!!

எர்ணாகுளத்தை அடுத்த வரபுழா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் நேற்று தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை திடீரென இந்த ஆலையில் இருந்து கரும்புகை ஏற்பட்டது. சிறிது நேரத்தில்…

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிப்பு? கட்சி தாவியோருக்குக் ‘கல்தா’ கொடுக்கும்…

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிப்போரில், கட்சித் தாவல் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களை உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு…

பிரபாகரன் இல்லையெனில் மீனவர்கள் மீது கெடுபிடி ஏன் ? கேள்வியெழுப்புகிறார் நாவலன்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிரோடு இல்லையென்று சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறுகின்ற நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவினால் வெளியிடப்பட்ட கருத்தின் பின்னர் தீவகத்தில் கடற்படையினரால் மீனவர்களை…

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்!!

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நகரங்களுக்கு இடையேயான…

3வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி!!

நடப்பு நிதியாண்டின் (2022-2023) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.…

யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!!

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய…

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி போராட்டம்!! (PHOTOS)

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம்…

வெடிபொருட்கள் அகற்றப்படாத முகமாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு!!

நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படும் பிரதேசங்களுக்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யுத்த காலத்தில்…

கோப்பாயில் சி.ஐ. டி என கூறி வீட்டினுள் நுழைந்தவரால் 38 பவுண் நகை கொள்ளை!!

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப…

பாராளுமன்றத்தில் வங்கிக் கிளைக்குப் பூட்டு!!

வங்கிகளின் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதே வேளையில் பாராளுமன்றத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் பணியாளர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்லும் எம்பிக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,799,892 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,927,382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,779,872 பேர்…

மண்ணெண்ணெய் விலை சடுதியாக குறைவு!!

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 305 ரூபாவாகும் இதேவேளை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் விலை மண்ணெண்ணெய் 134 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம். ஒருலீற்றரின் விலை. 330…

நாகாலாந்தில் 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!!

நாகாலாந்து மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜூன்ஹிபோட்டோ, சனீஷ், டிஷீட், தோனாக்யூ சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு…

காஷ்மீர் பண்டிட்டை கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ெதாடர்புடைய தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அச்சான் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா பண்டிட் இனத்தை சேர்ந்த இவர்,…

மந்திரிசபை முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி கருத்து!!

நாட்டில் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளுகிற பல மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த வகையில், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்திலும் கவர்னர் பன்வாரிலால்…

உக்ரைன் பதிலடியா? ரஷ்யா மீது சரமாரியாக டிரோன்கள் தாக்குதல்!!

ரஷ்யா மீது நேற்று சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2737 கோடி உளவு விமானம் தகர்க்கப்பட்டது. டிவி, ரேடியோக்கள் ஹேக் செய்யப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் ஒரு ஆண்டை கடந்து விட்டது. இருதரப்பிலும் சேதங்கள்…

அனைவரையும் அவசரமாக அழைத்தார் மஹிந்த!!

சகல கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளது. சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த அவசரக்கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அதில் பங்கேற்குமாறு கட்சிகளின் செயலாளர்களுக்கு…

கறுப்பு உடையில் கற்பித்த ஆசிரியர்கள்!!

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு…

சிறுமி துஷ்பிரயோகம்: தேரரை தேடி வேட்டை!!

எட்டுவயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 70 வயதான தேரரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபரான அந்த ​பௌத்த தேரர், இரண்டு மாதங்களாக அந்த சிறுமியை…

பொறியியல் மாணவி திடீர் மரணம்!!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவி அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. பல்கலைக்கழக விடுதியில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு RTI சட்டம் பொருந்தும்: நீதிமன்றம் உத்தரவு!!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) விதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுந்தும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிராகம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய…

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம்: பதவி ஏற்ற பின் குஷ்பு பேட்டி!!

பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு…

டெல்லி, லண்டனில் விசா மையம் தொடக்கம்!!

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேஷியாவில் நடந்த ஜி20 மாநாட்டின்போது பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இளம் தொழில்வல்லுநர்கள் விசா திட்டம் தொடங்குவதற்கு கையெழுத்திட்டனர். இந்த திட்டத்தின் கீழ் லண்டனில் இந்திய விசா…

கொரோனா வைரஸ் இயற்கை அல்ல, சில நாடுகள் செய்த சதி: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குற்றச்சாட்டு!!

மராட்டிய மாநிலம் அகோலாவில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு ஒன்றில் வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது:- கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்திலேயே, கொரோனா வைரஸ் இயற்கையாக…

ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே,…

மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம்: உத்தவ் தாக்கரே!!

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- மூத்த வக்கீல் கபில் சிபில் கூறியது சரியாக உள்ளது. சிவசேனா தொடர்பான வழக்கு சுப்ரீம்…

கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது?: அமெரிக்கா தகவல்!!

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது.…

நாளை இந்தியா செல்கிறார் அலி சப்ரி !!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (02) இந்தியாவுக்கு செல்லவுள்ளார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடடில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். அத்துடன், எதிர்வரும் 04 ஆம் திகதி…

வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பு: சுமந்திரன் !!

நிவித்திகல பிரதேச சபைக்கு போட்டியிட இருந்த வேட்பாளரின் மரணத்துக்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…

தொழிற்சங்க போராட்டத்தால் இன்று நாடு முடங்கும் அபாயம்?

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அனுமதி !!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் யோசனைக்கு…

50.6% ஆக குறைந்தது முதன்மைப் பணவீக்கம் !!

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 51.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் பெப்ரவரியில் 50.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம்…