அமெரிக்க குடியிருப்பு பகுதிகளின் மீது மோதிய விமானம் – தீ பற்றி எரியும் 15 வீடுகள்

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டிகோ(San Diego) நகரில், Cessna 550 என்ற சிறிய விமானம் குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாண்டிகோ விமான விபத்து
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணியளவில், மாண்ட்கோமெரி நிர்வாக விமான நிலையத்திற்கு அருகில் நடந்த இந்த விபத்தில் விமானம் நேரடியாக ஏராளமான வீடுகளின் மீது மோதியுள்ளது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 15க்கும் மேற்பட்ட வீடுகள் தீ பற்றி எறிந்துள்ளது.
A small plane has crashed in a populated area of San Diego on Thursday morning. Residents have been instructed to avoid the area near near Sculpin Street and Santo Road as crews work. #PlaneCrash #SantaRoad #SanDiego #SculpinStreet #Cessna550 #Breaking #Latest #Alert #Fire pic.twitter.com/evR496rlpz
— Europe Cognizant (@EuropeCognizant) May 22, 2025
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் அங்குள்ள 3 தெருக்களில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
6 முதல் 8 பேர் பயணிக்கும் வகையிலான இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அதில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த பகுதி முழுவதும் விமான எரிபொருள் உள்ளதாக உதவி தீயணைப்புத் தலைவர் டான் எடி தெரிவித்துள்ளார்.