;
Athirady Tamil News
Daily Archives

22 May 2025

உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை: இஸ்ரேல் மீது சர்வதேச மருத்துவ அமைப்பு குற்றச்சாட்டு

காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்கால ஒருங்கிணைப்பாளா்…

சீனாவில் இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான மிங் வம்ச கோபுரம்! பெரும் அதிர்ச்சி!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள சுமார் 650 ஆண்டுகள் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான…

மியான்மா் – விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்

மியான்மரில் கிளா்ச்சியாளா்களுடன் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்த ஹெலிகாப்டா் சுட்டுவீழ்த்தப்பட்டதாக…

லக்மாலி ஹேமசந்திரவுக்கு புதிய பொறுப்பு

இலங்கை பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (22) பாராளுமன்றத்தில் கூடியபோது,…

அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டை

அரசு நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து செயல்திறனை…

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு…

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து, பின்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார் என்பதை பார்க்கலாம். யார் அவர்? நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு…

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் புழுதிப் புயல்…

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான…

ஈரான் – தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாதிகளைக் காக்க ஈரான் முயல்கிறது என்று…

ஜப்பான் – அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய்தாா். நாட்டில் தற்போது நிலவரும்…

நாடாளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணம் அதிகரிப்பு

நாடாளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணத்தை அதிகரிக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் மாதாந்திர உணவுச் செலவு ரூ. 1,500 முதல் ரூ. 4,000 ஆகும். அத்துடன் நாடாளுமன்ற பொது…

கலைதுறை சார்ந்த விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர்…

இங்கிலாந்தில் உலகின் முதல் கோனோரியா தடுப்பூசி தொடங்கப்பட்டது

பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயான கோனோரியாவுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கும் உலகின் முதல் நாடாக இங்கிலாந்து இருக்கவுள்ளது. இத்தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்காது. பல பாலியல் கூட்டாளிகள் அல்லது STI வரலாற்றைக் கொண்டவர்கள்…

கூா்ஸ்கில் விளாதிமீா் புதின்

உக்ரைன் படையினரிடம் இருந்து ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு அதிபா் விளாதிமீா் புதின் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். முன்னறிவிப்பில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த…

ஒன்றரை வயது குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு…

சென்னை: கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி…

இந்தியாவில் இருந்து உப்பு வர தாமதம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.…

மாவனெல்ல விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

மாவனெல்ல கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து சம்பவ்ம இன்று (22) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், வரக்காபொல பிரதேசத்தைச்…

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல்…

வடமாகாண மீனவர் பிரச்சினைகள் குறித்து தமிழக எம்.எல்.ஏ. ஷா. நவாஸ் உடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கற் யாழ்.தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம்…

சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதியில் கால்வாய் கட்டும் திட்டத்துக்கு…

விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

உலகின் எந்தப் பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஏராளமான…

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில் பாலம் அருகே பயணப்பொதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் பயணப்பொதியில்…

சென்னை, மும்பை, அகமதாபாத்தில் கரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக…

யாழில் திருமணமான இளம் பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை கடத்தி சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான…

உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகள்!

உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் வகையில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகளை நடாத்தவுள்ளதாக இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான வைத்தியர் அஜந்தா…

உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொலை!

ஸ்பெயின் நாட்டில் உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சின், அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் ஆண்ட்ரி போர்ட்னோவ். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிலுள்ள அமெரிக்க பள்ளியின்…

காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள்! போப் வலியுறுத்தல்!

காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார். வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, புனித…

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் , உணவகத்திற்கான…

கண் சுகாதாரம்  தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் கடிதம்…

சங்கானையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்

சங்கானையில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த 26 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதில் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன்…

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற்றும் வேளாண்மைக்கு பாசன நீர் மற்றும்…

கிழக்கின் மருத்துவத் துறையை வியப்பில் ஆழ்த்திய மட்டக்களப்பு வைத்தியசாலை

மட்டக்களப்பில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) கடந்த சில…

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலாண்டில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு…

சங்கிலியனின் நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…