;
Athirady Tamil News

சுண்டுக்குளியில் நாளை இரத்ததான முகாம்!!

0

இலங்கை மின்சாரசபையின் 52 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை மின்சாரசபை ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை திங்கட்கிழமை (01.11.2021) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை யாழ்.சுண்டுக்குளி பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகத்தில் இரத்ததான முகாம் நிகழ்வு நடைபெறும்.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் குருதிக் கொடையாளர்கள் மற்றும் புதிதாக இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.