;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் சுயதொழில் ஊக்குவிப்பு!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு .கருணாகரன் முரளிதரன் அவர்கள் தனது பிறந்த தினத்தினை இன்று ( 28 .11. 2021) கொண்டாடுகின்றார் . அதனை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இயங்கிவருகின்ற பனம்பொருள் உற்பத்தி சங்கத்தினருக்கு ரூபாய் 12000 பெறுமதிமிக்க உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது . மேற்படி சுயதொழில் ஊக்குவிப்பு பனம்பொருள் உற்பத்தி நிலையத்தில் 25 பெண்கள் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது .

அத்தோடு திரு. கருணாகரன் முரளிதரன் அவர்களின் ரூபாய் 20000 நிதியுதவியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இம்மாதத்திற்கான அறிந்திரன் சிறுவர் சஞ்சிகைகளும் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.