;
Athirady Tamil News

மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு!

0

மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணிகடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் , தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.