;
Athirady Tamil News

இளவாலையில் கஞ்சா களவாடிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!

0

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை களவாடிய இளவாலை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி கஞ்சா கடலில் மீற்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா இளவலைப் பொலிசாரிடம் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட கஞ்சா தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்து சான்றுப் பொருளாக கஞ்சாவை ஒப்படைத்த சமயம் கஞ்சாவில் ஒரு பகுதியினை குறித்த பொலிஸ் உப பரிசோதகர் கையாடல் செய்துள்ளார். இதனையடுத்து உப பரிசோதகர் கடந்த 17 ஆம் திகதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.