;
Athirady Tamil News

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்!! (படங்கள்)

0

வவுனியாவில் உள்ள ஆலயங்கள் , கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அத்துடன் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜை இடம்பெற்றிருந்ததுடன் நெய்தீபம் ஏற்றி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன் இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களுடன் குறித்த வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.