;
Athirady Tamil News

நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு !!

0

பாரிய நீர் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக இராஜங்கனை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இராஜங்களை நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் இருந்து 2,400 கன அடி நீர் கலா ஓயாவுக்கு பாய்ச்சப்படுகின்றது.

அதேவேளை, அங்கமுவ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியதனால் அதன் 2 வான் கதவுகள் 2 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதன் நீர் லுணு ஓயாவை சென்றடைகின்றது. இந்த பிரதேசத்தில் கனமழை பெய்வதனால் இவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.