;
Athirady Tamil News

நெடுந்தீவு முச்சக்கர வண்டி விபத்து: பாதசாரி பலி

0

நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு,வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.