;
Athirady Tamil News

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் – பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் உயிரிழப்பு…!!!

0

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தடுப்பூசி செலுத்தாமல் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான ஜோஸ் எவ்ரார்டு (76), தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார். இவர் வடக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள பாஸ் டி கெலைஸ் பகுதியைச் சேர்ந்தவர்.

இவரது மரணம் தடுப்பூசியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.15 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.