;
Athirady Tamil News

மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

0

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய உயிரியல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,500 வரை அதிகரிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.