உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்
;
ஒரு குழந்தை பிறந்தது முதல் முதியவராகும் வரை அரசாங்கம் பல உத்தியோகத்தர்களை நியமித்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட நடமாடும் சேவைகளை மேற்கொண்டதன் மூலமாக, கிராமிய மக்களுக்கு இந்த நடமாடும் சேவை அவசியமானதாக காணப்படுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் முதலாம் நாள் படுக்கையில் உள்ள முதியவர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்து ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்குவது எனவும், இரண்டாம் நாள் நெல்லியடி மத்திய கல்லூரியில் மருத்துவ முகாம் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் தொற்றா நோய்கள், கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பியல் மருத்துவம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பிரிந்திகா, பிரதேச வைத்திய அதிகாரி வி. கமலநாதன், தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி இளங்கோ ஞானியார், வைத்தியர் எஸ். குணநாதன் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் வி. சண்முகராஜா கரவெட்டி பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.