;
Athirady Tamil News

உயர்தர பரீட்சை முடிவுகள் விரைவில் !!

0

இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளா்.

இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.