;
Athirady Tamil News

புத்தாண்டு விபத்துகளில் சிறுவன் உட்பட 7 பேர் பலி !!

0

நாடளாவிய ரீதியில், புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற பாரிய விபத்துகளில், சிறுவன் உட்பட ஏழுபேர் மரணித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், கைகலப்பில் ஒருவரும் நீரில் மூழ்கி ஒருவரும் மரணித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் விபத்தில்…

சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் வெல்லராவ சந்தியில் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் 39 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். அவரை அக்குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். குண்டாந்தடி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம், நேற்று (14) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கி மரணம்

சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நேற்று (14) நுவரகல வாவியில் நீராடிகொண்டிருந்த 65 வயதான நபரொருவர் மரணமடைந்துள்ளார் இது தொடர்பில் சிறிபுற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாணிக்கக்கல் அகழ்ந்தவர்கள் கைது

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெசல்கமுவ ஆற்றிலில் மோரா தோட்டப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்துகொண்டிருந்த 31 மற்றும் 48 வயதான இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி விபத்து

இறக்குவானை பொலிஸ் பிரிவில், இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய வீதியில் நேற்று (14) இடம்பெற்ற வீதி விபத்தில். 48 வயதானவர் மரணமடைந்தார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் வந்த லொறி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில், கடுங்காயமடைந்தவர், கொடக்கவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்தார்.

லொறியின் சாரதியினால், பாதுகாப்பற்ற முறையிலும் கவனயீனமாக லொறியை ஓட்டிச்சென்றமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், லொறியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

வீதி விபத்து

ஹொரனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரனை- தல்காவ வீதியில், பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 61 வயதானவர் மரணமடைந்துள்ளார்.

வீதி விபத்து

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொழும்பு- கண்டி பங்களாவீதி எனுமிடத்தில், மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்படுத்த முடியாமையால், மின்சார கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கடவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயதானவர் மரணமடைந்துவிட்டார்.

வீதி விபத்து

வெல்லவ பொலிஸ் பிரிவில், லொறியொன்று எதிர்திசையில் பயணித்த ஓட்டோ ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டோவில் பயணித்த மூவர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஓட்டோ சாரதி மரணமடைந்துள்ளனர்.

வீதி விபத்து

அத்தனகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்படுத்தமுடியாமையால், மின்சார கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 34 வயதான நபர் மரணமடைந்துவிட்டார்.

வீதி விபத்து

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில், அனுராதபுர-பாதணி எனுமிடத்தில், பாதசாரி கடவைக்கு அருகில், மோட்டார் சைக்கிளொன்று திரும்புவதற்கு முற்பட்டபோது, எதிர்திசையில் பயணித்த காரொன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதில், மோட்டார் சைக்கிள் பயணித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். அதில், 13 வயதானவர் மரணமடைந்துவிட்டார்.

வீதி விபத்து

குருநாகல்- தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மரணமடைந்தார்.

லொறியும் டிப்பர் மோதி விபத்துள்ளானது. லொறியின் சாரதி மற்றும் அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், லொறியின் சாரதி மரணமடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.