;
Athirady Tamil News

உக்கிரமடையும் போர்… ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் இருந்து வெளியேறுமாறு
இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துவரும் நிலையில், அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், ஈரான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அப்படியான ஒப்பந்தம் ஒன்றில் ஈரான் கையெழுத்திடாமல் இருக்கவே இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடுத்துள்ளது என அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மட்டுமின்றி, ஈரான் முன்னெடுத்துவரும் பதில் தாக்குதலால் தடுமாறும் இஸ்ரேல், தற்போது போரில் களமிறங்க வேண்டும் என அமெரிக்காவை கட்டாயப்படுத்தி வருகிறது.

இன்று டெல் அவிவ் நகரம் மீது நடத்தப்படும் தாக்குதல் நாளை நியூயார்க் மீதும் நடத்தப்படும் என அமெரிக்காவை தூண்டிவிடும் வேலையை பிரதமர் நெதன்யாகு முன்னெடுத்துள்ளார்.

தன்னிச்சையாக நடவடிக்கை
ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி, ஈரான் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ட்ரம்பால் முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும் அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளது கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் சூழலில், ஈரான் வசம் அணு ஆயுதம் கூடாது என அமெரிக்கா கட்டாயப்படுத்தி வருகிறது. அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் என பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.