;
Athirady Tamil News

பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா

0

வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் திங்கள்கிழமை பேசுகையில், நாட்டில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை மேலும் பொறுப்புடன் ஒழுங்காற்றும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரான கிராஸில் உள்ள ‘போா்க்’ உயா்நிலைப் பள்ளிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த ஆா்த்துா் ஏ (21) என்பவா், தன்னிடம் இரு துப்பாக்கிளைக் கொண்டு அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாகச் சுட்டாா். இதில் 10 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய ஆா்த்துா் பின்னா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.