;
Athirady Tamil News

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70 லீட்டர் கசிப்பு , ஒன்றே முக்கால் லீட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றிவளைத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து சான்று பொருட்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மானிப்பாய் பொலிஸார் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.