;
Athirady Tamil News

குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

0

2022-05-17 ஆம் திகதி முதல், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்துக்கொண்டு வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

இருப்பினும் பலர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு வழங்கும் போது ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் காலங்களில் இந்த சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101 060 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்வதன் மூலம் திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்

அரச வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.