;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை..!!

.

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று வங்கி மேலாளராக பணிபுரிந்த விஜய் குமார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த பரபரப்பு முடிவதற்கு தற்போது மற்றொரு படுகொலையும் அரங்கேறியுள்ளது.

காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். அந்த செங்கல் சூளைக்குள் நேற்று இரவு 9 மணியளவில் துப்பாக்கியுடன் சென்ற பயங்கரவாதிகள் அங்கு வேலைசெய்துகொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பீகாரை சேர்ந்த தில்குஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தான். பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெரும் இந்த தாக்குதல்களை நிறுத்த மத்திய மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.