;
Athirady Tamil News

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்)

0

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை ஏற்றி அகவணக்கம், மலரஞ்சலி என்பனவும் இடம்பெற்றது.

தொடர்ந்து பொன் சிவகுமாரனின் கல்லறை உள்ள இடத்திலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.